Advertisement

சோழவரம் பகுதியில் திமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடி குண்டு வீசிய சம்பவம்: 4 பேர் ஆந்திராவில் கைது

திருவள்ளூர்: சோழவரம் பகுதியில் திமுக பிரமுகர் வீடு மற்றும் லாரி யார்டில் நாட்டு வெடி குண்டுகள் வீசியது தொடர்பாக பிரபல ரவுடி உட்பட 4 பேரை ஆந்திராவில் தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன் (38). இவர், சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக துணை அமைப்பாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி அபிஷா பிரியதர்ஷினி, சோழவரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில், நேற்று மதியம் 2 மோட்டார் சைக்கிள்களில் முகமூடி அணிந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று, ஜெகன் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. இதில், வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களின் கண்ணாடிகள் சேதமடைந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments