
ராமேசுவரம்: இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு மன்னார் வளைகுடா கடல் வழியாக கடத்த முயன்ற 4 கிலோ 740 கிராம் தங்கத்தை அந்நாட்டு கடற்படையினர் கைப்பற்றி கடத்தல்காரர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இலங்கையில் உள்ள புத்தளம் மாவட்டம் கல்பிட்டி அருகே மன்னார் வளைகுடா கடற்பகுதியில் அந்நாட்டு கடற்பகுதியினர் இன்று ரோந்துப் பணியில் இருந்தனர். அப்போது ஒரு மர்மப் படகை துரத்திச் சென்றபோது படகில் இருந்தவர்கள் ஒரு பார்சலை கடலுக்குள் தூக்கி எறிந்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து கடற்படையில் உள்ள நீச்சல் (ஸ்கூபா டைவர்ஸ் ) வீரர்கள் பார்சல் தூக்கி எறியப்பட்ட பகுதியில் நீண்ட தேடுதலுக்குப் பிறகு ஒரு பார்சலை கைப்பற்றினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments