Advertisement

கோவையில் இ-சிகரெட் பயன்பாடு அதிகரிப்பு: போலீஸ் கண்காணிப்பு தீவிரம்

கோவை: கோவையில் கல்வி நிறுவனங்கள், ஐ.டி. நிறுவனங்கள் நிறைந்த பகுதிகளில் மாணவர்கள், இளைஞர்களிடம் இ-சிகரெட் பயன்பாடு அதிகரித்து வருவதாக புகார்கள் வருவதைத் தொடர்ந்து, கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் இந்தியாவில் 15 வயதுக்கு மேற்பட்டோர் சுமார் 26 கோடி பேர் புகையிலை பயன்படுத்துவதாக, உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. புகையிலை பொருட்களான சிகரெட், பீடி மற்றும் ஹான்ஸ் பயன்படுத்துவதால் உடலுக்கு பலவித நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. பீடி, சிகரெட்டுகளை பயன்படுத்துபவர்கள் மட்டுமின்றி, அவர்கள் வெளியே விடும் புகையை சுவாசிக்கும் மற்றவர்களுக்கும் வாய், நுரையீரல் புற்று நோய் அபாயமும், ஆண்கள், பெண்களுக்கு மலட்டுத்தன்மை பாதிக்கும் அபாயமும் உள்ளது. இதனால் இ-சிகரெட் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி, விநியோகம், விற்பனை, சேமித்து வைத்தல், விளம்பரம் உட்பட இ-சிகரெட் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் தடை செய்யப்படுவதாக கடந்த 2019-ல் மத்திய அரசு அறிவித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments