
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கொலையாளிகளுக்கு ரூ.1 கோடிவரை பணம் கைமாறி உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதுகுறித்து தனிப்படை போலீஸார் விசாரணை வளையத்தை விரிவுபடுத்தி உள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் பொன்னை பாலு, திருவேங்கடம் ஆகியோர் உட்பட 11 பேரை கைது செய்து பூந்தமல்லி சிறையில் அடைத்தனர். அவர்களை 5 நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்தனர். இதில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டம் தீட்டிக் கொடுத்ததோடு, முதல் தாக்குதல் நடத்தியது திருவேங்கடம் என்பது தெரியவந்தது. கடந்த 14-ம் தேதி அதிகாலை மணலிக்கு போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டபோது நடந்த என்கவுன்ட்டரில் திருவேங்கடம் உயிரிழந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments