
சென்னை: ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என கூறி பல் மருத்துவரிடம் ரூ.1.20 கோடி பணம் மோசடி செய்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை வானகரத்தை சேர்ந்த பல் மருத்துவர் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவில், ‘எனக்கு முகநூல் மூலம் ஆன்லைன் முதலீடு வர்த்தகம் தொடர்பான விளம்பரம் வந்தது. அதைப் பார்த்துவிட்டு தொடர்பு கொண்ட போது, எனது செல்போன் எண்ணை ஒரு வாட்ஸ் அப் குழு ஒன்றில் அது இணைத்தது. அந்தக் குழுவில் பேசிய நபர்கள், லிங்க் ஒன்றை அனுப்பினர். அந்த லிங்க் வழியே நான் முதலீடு செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்தேன்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments