Advertisement

சென்னை | ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் 3 பேர் சரண்: ரவுடி உட்பட 3 பேருக்கு போலீஸ் வலை

சென்னை: ஆட்டோ ஓட்டுநரை கொலை செய்த வழக்கில் 3 பேர் போலீஸில் சரணடைந்தனர். மேலும், ரவுடி உட்பட 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கவுதம் (27). ஆட்டோ ஓட்டுநர். இவருக்கும் நந்தனம் சிஜடி நகரைச் சேர்ந்த ரவுடி ராஜ்கிரணின் மனைவி பிரியா (23) என்பவருக்கும் நட்பு ஏற்பட்டு, ராஜ்கிரணை பிரிந்து கடந்த ஓராண்டாக கவுதமுடம் பிரியா வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் தங்களுக்கு ராஜ் கிரண் இடையூறாக இருப்பதாகக் கருதி கடந்த செப்டம்பர் மாதம் கவுதமும், பிரியாவும் சேர்ந்து கொரட்டூரில் ராஜ்கிரணை கொலை செய்ய முயன்றுள்ளனர். இதில் ராஜ்கிரண் உயிர் தப்பி, கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் கவுதம், பிரியா இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments