Advertisement

ஐ.டி. ஊழியரிடமிருந்து ரூ.1.5 கோடி மதிப்புள்ள 7 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை: மடிப்பாக்கத்தில் ஐ.டி. ஊழியர் பயணம் செய்த ஆட்டோவில் ரூ. 1.5 கோடி மதிப்புள்ள 7 கிலோ எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை, மடிப்பாக்கம் 200 அடி ரேடியல் சாலையில், போலீஸார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த ஆட்டோவை சோதனை செய்தபோது, அதில் பயணித்த இளைஞர் வைத்திருந்த பையில் 7 கிலோ உயர் ரக கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.1.5 கோடி ரூபாய் இருக்கலாம் என கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments