
சென்னை: மயிலாப்பூரில் கத்தி முனையில் ரூ.1.50 கோடி பறிக்கப்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு தமிழகத்தில் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க அரசியல் கட்சியினர் பணம் மற்றும் பரிசு பொருட்களை கொடுத்து வாக்குகளை கவர்ந்து விடக்கூடாது என்பதற்காக பறக்கும் படையினர் 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பு மற்றும்வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments