
சென்னை: ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் பெண் அதிகாரியின் ரூ.6.5 கோடி மதிப்புள்ள காலி மனையை ஆள்மாறாட்டம் செய்து அபகரித்ததாக கட்டுமான நிறுவன உரிமையாளர் உள்பட 4 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை அசோக்நகரைச் சேர்ந்தவர் ராதை(81). இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில், ‘மாதவரம் தணிகாச்சலம் நகரில் எனது தாயாருக்குச் சொந்தமான ரூ.6.5 கோடி மதிப்புள்ள காலிமனை உள்ளது. தாயார் காலமானதையடுத்து, அச்சொத்து எனது அனுபவத்தில் இருந்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments