
விசாகப்பட்டினம்: சமூக வலைதளத்தில் பிரபலமாகி, பின்னர் கன்னடம், தெலுங்கு என சிறிய பட்ஜெட் படங்களில் கதாநாயகியாகி ‘யுவர்ஸ் லவ்விங்லி, தி டிரிப் உட்பட சில படங்களில் நடித்து தெலுங்கு திரையுலகில் வலம் வருபவர் நடிகை சவும்யா ஷெட்டி. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தை சேர்ந்த இவருக்கு, சில நாட்களுக்கு முன் அதே விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பிரசாத் என்பவரின் மகளுடன் நட்பு ஏற்பட்டது.
பிரசாத்தின் மகள் அழைத்ததால், சவும்யா ஷெட்டி அவரது வீட்டிற்கு சென்றார். இதனால் இவர்களின் நட்பும் வளர்ந்தது. சவும்யா ஷெட்டி அடிக்கடி இவரது வீட்டுக்கு வந்து போவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனை பிரசாத்தும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன் மகளின் படுக்கை அறையில் உள்ள பீரோவில் வைக்கப்பட்டிருந்த 40 பவுன் நகைகள் மாயமானதை கண்டு பிரசாத்தும் அவரது வீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments