
சென்னை: மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் முதியவரை கல்லால் அடித்து கொலை செய்த பெண் உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
வடபழனி குமரன் காலனி பகுதியில் சாலை ஓரத்தில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தலையில் ரத்தக் காயங்களுடன் மயங்கிக் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்குவிரைந்து சென்ற வடபழனி போலீஸார், காயங்களுடன் கிடந்த முதியவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், காயம் அடைந்த நபர்யார், அவரை யார் தாக்கியது என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். இதனிடையே, அந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments