Advertisement

சென்னை | தனியார் டிவி ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல்: திமுக பிரமுகர்கள் 2 பேர் கைது

சென்னை: தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில் திமுகவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். டெல்லியில் ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையைச் சேர்ந்த திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கை டெல்லி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம், காம்தார் நகரில் உள்ள திமுக பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான கூரியர் நிறுவனத்தில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்துவதாக நேற்று முன்தினம் தகவல் வெளியானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அந்த அலுவலகத்துக்குச் சென்று படம் பிடிக்க முயன்ற தனியார் தொலைக்காட்சி நிறுவன ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments