Advertisement

ஆவடி | 15 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல்: பஸ்ஸில் கடத்திய சிறுவன் உட்பட 2 பேர் கைது

ஆவடி: ஆவடி அருகே கோயில் பதாகை பகுதியில் நேற்று தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, ஆவடியிலிருந்து செங்குன்றம் செல்லும் ‘61 ஆர்’ என்ற தடம் எண் கொண்ட மாநகர பேருந்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பேருந்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞர்கள் 3 பேர், தாங்கள் வைத்திருந்த கைப்பையை விட்டுவிட்டு ஓடினர்.

அந்த கைப்பையை தேர்தல் பறக்கும் படையினர் எடுத்து பார்த்தபோது அதில், 15 ஆயிரம் மாத்திரைகள் இருந்ததும், ஆங்கில மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் அந்த மாத்திரையை போதைக்காக இளைஞர்கள் பயன்படுத்தி வருவதும் தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments