Advertisement

அமெரிக்க விசா பெற போலி பட்டப்படிப்புச் சான்றிதழ்கள்: கேரளாவைச் சேர்ந்த பெண் கைது 

சென்னை: அமெரிக்க தூதரகத்தில் விசா பெற பட்டப்படிப்பு சான்றிதழ்களை போலியாக தயார் செய்து கொடுத்த கேரளாவை சேர்ந்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து, கணினி மற்றும் போலி சான்றிதழ்களையும் போலீஸார் பறிமுதல் செய்துள்னர்.

இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறியிருப்பதாவது: சென்னை அமெரிக்க தூதரக Regional Security Officer அளித்த புகாரில், கேரளாவைச் சேர்ந்த அமல் ஷாஜி என்பவர் அமெரிக்கா செல்ல Student F1 Visa கேட்டு விண்ணப்பித்தார். அதன் பேரில் ஜன.30ம் தேதி அமெரிக்க தூதரகத்துக்கு நேர்முகத் தேர்வுக்கு வந்தவரின் ஆவணங்களை சரிபார்த்தபோது மேற்படி அமல் ஷாஜி தாக்கல் செய்த ஆவணங்களான சென்னை பல்கலைக்கழக சான்றிதழ்கள் Bachelor of Computer Application (BCA) போலியாக இருந்தது தெரியவந்தது. மேற்படி சான்றிதழ்களை கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள RISS Royal Academy-ல் தயார் செய்து கொடுத்ததாக அமல் ஷாஜி தெரிவித்ததார். எனவே போலியான சான்றிதழ்களை தயார் செய்து கொடுத்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தார். அதன் பேரில் சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, மோசடி புலனாய்வு பிரிவில் (Forgery Investigation Wing) வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments