
நாகப்பட்டினம்: நாகை அருகே நடுக்கடலில் இருதரப்பு மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சந்தோஷ் என்பவருக்குச் சொந்தமான பைபர் படகில், அதேபகுதியைச் சேர்ந்த ஆத்மநாதன் (33), அவரது சகோதரர்கள் சிவநேசசெல்வம்(23), காலத்திநாதன் (22) ஆகியோர் நேற்று முன்தினம் நாகை துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் 2 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments