Advertisement

ஆவடி | `மணமகன் தேவை’ போலி விளம்பரம் மூலம் திருமணமாகாத இளைஞரிடம் ரூ.15 லட்சம் பறித்தவர் கைது

ஆவடி: அரியலூர் மாவட்டம் சாத்து மங்களத்தை பூர்வீகமாக கொண்ட கோபிராஜன், தற்போது அம்பத்தூரில் வசித்து வருகிறார். கேட்ரிங் டிப்ளமோ படித்துள்ள இவர், சமையல் பணி செய்து வருகிறார். கோபிராஜனுக்கு 33 வயதாகியும் திருமணம் செய்ய தகுந்த பெண் அமையவில்லை என கூறப்படுகிறது.

இதனால், பெற்றோரின் அறிவுரைப்படி நாளிதழ் ஒன்றில், மணமகள், மணமகன் தேவை விளம்பர பக்கத்தை தொடர்ந்து பார்த்து வந்த கோபிராஜன், ‘சிவாஸ்ரீ, என்ற தாய் - தந்தை அற்ற பெண்ணுக்கு மண மகன் தேவை என்ற விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments