Advertisement

காதல் திருமணம் செய்ததால் மகளை பெற்றோரே கொன்ற வழக்கில் தடயங்களை மறைத்த 3 உறவினர்கள் கைது @ பட்டுக்கோட்டை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள நெய்வவிடுதியைச் சேர்ந்த பெருமாள்- ரோஜா தம்பதியின் மகள் ஐஸ்வர்யா(19). அருகில் உள்ள பூவாளூரைச் சேர்ந்த பாஸ்கர் மகன் நவீன் (19). பொறியியல் பட்டயப் படிப்பு படித்துள்ளார்.

வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தநிலையில், திருப்பூர் மாவட்டம், அரவப்பாளையத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் இருவரும் பணியாற்றினர். இந்நிலையில், டிச.31-ம் தேதி, நண்பர்கள் முன்னிலையில் ஐஸ்வர்யாவும், நவீனும் திருமணம் செய்து கொண்டு, வீரபாண்டி அருகே வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments