
நாகர்கோவில்/சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் மைலோடு கிறிஸ்தவ ஆலய இல்லத்துக்குள் அரசுப் போக்குவரத்து கழக ஊழியர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, திமுக ஒன்றியச் செயலாளர், இரு பாதிரியார்கள் உட்பட 15 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கன்னியாகுமரி திங்கள்சந்தை அருகேயுள்ள மைலோடில் மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் பாதிரியாராக ராபின்சன் என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், ஆலய கணக்குகள் குறித்து மைலோடு மடத்துவிளையைச் சேர்ந்த அரசுப் போக்குவரத்து கழக ஊழியர் சேவியர் குமார்(42) கேள்வி கேட்டுள்ளார். மேலும், ஆலய நிர்வாகத்தில் குளறுபடிகள் நடப்பதாக சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார். இவர், நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றியத் தலைவராகவும் இருந்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments