
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பயணிகள் நிழற்குடையில் கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயம் அடைந்தார்.
பழநி அருகேயுள்ள தொப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த தமிழரசன் (27), ராகவேந்திரன் (26), வாகரை பகுதியைச் சேர்ந்த கனீஸ்வரன் (25) உட்பட 4 பேர் காரில் ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தயம் - தொப்பம்பட்டி சாலையில் உள்ள மாம்பறை முனியப்பன் கோயிலுக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். காரை தொப்பம்பட்டியை சேர்ந்த சண்முகசுந்தரம் (27) ஓட்டினார். இன்று (டிச.8) மாலை பொருளூர் புளியம்பட்டி பிரிவில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த பயணிகள் நிழற்குடையில் பலமாக மோதியது. இதில் நிழற்குடை இடிந்து காரின் மேல் விழுந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments