Advertisement

பெண்ணின் கையை வெட்டியவருக்கு 10 ஆண்டு சிறை @ கோவை

கோவை: கோவை காரமடை கோவிந்த போயன் சந்து பகுதியைச் சேர்ந்தவர் தங்க ராஜ். கட்டிட மேஸ்திரி. சின்னதொட்டிபாளையம் எம்ஜிஆர் காலனியைச் சேர்ந்தவர் சுஜாதா. இவரது கணவர் இறந்துவிட்டதால், தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்ததோடு, தங்கராஜிடம் சித்தாள் வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், திருமணமாகாத தங்கராஜ், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு சுஜாதாவி டம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். கடந்த 2019 ஜூலை 29-ம் தேதி அவரது வீட்டுக்கு சென்ற தங்க ராஜ், இது குறித்து பேசியுள்ளார். சுஜாதா மறுக்கவே, அவரை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில், சுஜாதாவின் இடது கை மணிகட்டு பகுதி துண்டானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments