
சென்னை: சென்னை வந்த இலங்கை தொழில்அதிபர் ரூ.15 லட்சம் கேட்டு கடத்தப்பட்டார். கடத்தல் கும்பல் கைது செய்யப்பட்டது தொடர்பான பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறைக்குக் கடந்த 15-ம் தேதி இரவு 8.45 மணிக்கு போன் அழைப்பு ஒன்றுவந்தது. எதிர்முனையில் பேசிய இளம் பெண் ஒருவர், ``தான்இலங்கையிலிருந்து பேசுவதாகவும், தனது தந்தை முகமது ஷியாம் (50) பாக்கு மற்றும் பாக்கு மட்டை வியாபாரம் செய்து வருவதாகவும், வியாபாரம் தொடர்பாக இலங்கையிலிருந்து சென்னைக்கு வந்து பாரிமுனையில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் அவர் தங்கி இருந்ததாகவும், அங்கிருந்து தந்தையின் செல்போன் மூலம் பேசிய நபர், தனது தந்தையைக் கடத்தி வைத்திருப்பதாகவும், ரூ.15 லட்சம் பணம் அனுப்பினால் விடுவிப்பதாகவும், இல்லை என்றால் கொலை செய்துகடலில் வீசிவிடுவதாகவும் மிரட்டுகின்றனர். எனவே, எனது தந்தையைக் காப்பாற்றுங்கள்'' எனக்கூறி கதறி அழுதார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல் கட்டுப்பாட்டு அதிகாரிகள் கடத்தல் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்குத் தெரிவித்தனர். இதையடுத்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மேற்பார்வையில், கூடுதல் காவல் ஆணையர் அஸ்ரா கார்க் தலைமையில் வடக்கு கடற்கரை காவல் நிலைய ஆய்வாளர் ராஜா சிங் விசாரணையில் இறங்கினார். கடத்தல்காரர்கள் வாட்ஸ்-அப் காலில் பேசியுள்ளனர். மேலும், கத்திமுனையில் முகமது ஷியாம் இருப்பது போல் வீடியோ கால் மூலமும் மிரட்டியுள்ளனர். இந்த வீடியோ காட்சிகளை, கைப்பற்றிய போலீஸார் அக்காட்சியின் பின்னணியில் உள்ள இடம் எங்குள்ளது என ஆராய்ந்தனர். மேலும்,சைபர் க்ரைம் போலீஸார் மூலம் செல்போன் டவர் இருப்பிடம் குறித்து ஆராயப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments