Advertisement

ராணுவ வீரர்களிடம் ரூ.1,200 கோடி மோசடி: ஈரோடு தனியார் நிறுவன நிர்வாக இயக்குநர் கைது

ஈரோடு: ராணுவ வீரர்களிடம் ரூ.1,200 கோடிமோசடியில் ஈடுபட்டதாக தனியார் நிதி நிறுவன நிர்வாக இயக்குநர் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு-மேட்டூர் சாலையில் செயல்பட்டு வந்த `யுனிக் எக்ஸ்போர்ட்' நிறுவனத்துக்கு, தமிழகம் முழுவதும் கிளைகள் இருந்தன. இதன் நிர்வாகஇயக்குநர் நவீன்குமார். இந்த நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.9 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1.80 லட்சமும், ரூ.5 லட்சம்முதலீடு செய்தால் மாதம் ரூ.75 ஆயிரம்வீதம் ரூ.7.50 லட்சமும், ரூ.25 லட்சம்முதலீடு செய்தால் 5 வருடங்களில் 4 தவணையாக ரூ.83 லட்சமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments