Advertisement

தொழிலதிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய ஐபிஎஸ் அதிகாரி உட்பட 9 பேர் அசாமில் கைது

குவாஹாட்டி: அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ரபியுல் இஸ்லாம். கடந்த ஜூலை 16-ம் தேதி இரவு இவரின் வீட்டுக்குள் திடீரென நுழைந்த காவல் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, ரபியுல் இஸ்லாமிடம் போதைமருந்து மற்றும் முறைகேடான பணப்பரிவர்த்தனை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். சுமார் ஒரு மணி நேரம் அடித்து உதைத்த பிறகு அவரையும் அவரது உறவினர் இருவரையும் பபனிபூர் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர்களை பல மணி நேரம் சட்டவிரோதமாக காவலில் அடைத்து வைத்துள்ளனர். பின்னர், எஸ்பி வீட்டுக்கு அழைத்து சென்று அங்கும் விசாரணை நடத்தியுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments