
தருமபுரி: தருமபுரி அருகே கருவில் உள்ள குழந்தையின் பாலினம் தெரிவித்த செவிலியர் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த செம்மண்குழி மேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில், கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை ஸ்கேன் கருவி மூலம் கண்டறிந்து சிலர் தெரிவிப்பதாக மருத்துவ நலப்பணிகள் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கிடைத்தது. அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை மருத்துவக் குழுவினர் அப்பகுதியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டபோது தகவல் உறுதி செய்யப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments