Advertisement

நூல் பண்டல்கள் வாங்கி ரூ.81.16 லட்சம் மோசடி: கும்பல் தலைவன் உட்பட 8 பேர் கைது

கோவை: வியாபாரிகளிடம் நூல் பண்டல் களை வாங்கி ரூ.81.16 லட்சம் மோசடி செய்யப்பட்ட வழக்குகளில் தொடர்புடைய 8 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் பல்வேறு வியாபாரிகளிடம் கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்தது.

கோவை கணபதி கே.ஆர்.ஜி லே அவுட்டைச் சேர்ந்தவர் நேசமணி. நூல் வியாபாரி. இவர், ராமநாதபுரம் போலீஸாரிடம் அளித்த புகாரில், ‘‘என்னிடம் ரூ.33.16 லட்சத்துக்கு நூல் பண்டல்களை வாங்கிக் கொண்டு அதற்குரிய பணத்தை தராமல் பெருமா நல்லூரைச் சேர்ந்த ஆனந்த் (43), திருப்பூர் போயம்பாளையத்தைச் சேர்ந்த பாரத் (39), செளரிபாளையம் இந்திரா நகரைச் சேர்ந்த மோசஸ் மேத்யூ (31), அவிநாசி யைச் சேர்ந்த மருதாசலம் (49) ஆகியோர் ஏமாற்றிவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ எனக் கூறியிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments