Advertisement

தருமபுரி | சந்துக் கடையில் தடையின்றி மதுபானம் விற்பனை - துணையாக இருந்த டாஸ்மாக் பணியாளர்கள் 7 பேர் பணியிடை நீக்கம்

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் சந்துக் கடையில் தடையின்றி மதுபானம் விற்பனைக்கு துணையாக இருந்த டாஸ்மாக் பணியாளர்கள் 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

நல்லம்பள்ளி வட்டம் அதியமான்கோட்டை ஊராட்சியில் வடக்குத் தெரு கொட்டாவூர் பகுதியில் அருகருகே 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்தன. இந்தக் கடைகளால் வடக்குத் தெரு கொட்டாவூர் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் கூறி வந்தனர். அங்கிருந்த 2 கடைகளில் ஒரு கடை மட்டும் நல்லம்பள்ளி அருகிலுள்ள டாடா நகர் பகுதிக்கு ஒரு மாதம் முன்பு இடமாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், வடக்குத் தெரு கொட்டாவூர் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில்(எண் : 2821) பணியாற்றுவோர், மது வாங்க வருவோரிடம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வதாகவும், கள்ளச் சந்தைகளில் மதுபானம் விற்பனை செய்வோருக்கு மொத்தமாக மதுபானங்களை விற்பனை செய்வதாகவும் புகார் எழுந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments