
மதுரை: மதுரை வில்லாபுரத்தில் 6 மாத பெண் குழந்தை மர்மமான முறையில் இறந்தது. இதையடுத்து, புதைக்கப்பட்ட குழந்தையின் சடலத்தை வட்டாட்சியர் முன்னிலையில் தோண்டியெடுத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வில்லாபுரம் அகஸ்தியர் தெருவைச் சேர்ந்தவர் காளீஸ்வரன் (27), இவரது மனைவி கார்த்திகை ஜோதி(25). இவர்களுக்கு 5 வயதில் அரிமித்ரன் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் 6 மாதத்துக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்தது முதலே இதயப் பிரச்சினை இருந்தது. இதனால் பல மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தனர். 3 வாரங்களுக்கு முன்பு, சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றுவிட்டு, மீண்டும் மதுரைக்கு வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments