
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் கள்ளநோட்டு மாற்ற முயன்ற இருவரை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து 45.2 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுகள் மற்றும் இயந்திரங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இது தொடர்பாக காவல் துறை வெளியிட்ட தகவல்: நுங்கம்பாக்கம், புஷ்பா நகரைச் சேர்ந்த மணி என்பவர், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் பேருந்து நிறுத்தம் எதிரில் காய்கறி கடை நடத்தி வருகிறார். நேற்று (ஆக.17) மாலை மணி காய்கறி கடையிலிருந்தபோது, ஒரு நபர் மணியின் கடையில் காய்கறி வாங்கிவிட்டு, நான்கு 500 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்துள்ளார். மணி அதை வாங்கி பார்த்தபோது கள்ளநோட்டு போல சந்தேகம் ஏற்படவே, உடனே அவர், காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்ததின் பேரில், நுங்கம்பாக்கம் (F-3)போலீஸார் மேற்படி கடைக்கு சென்று விசாரித்தபோது, அந்த நபர் கொடுத்த பணம் கள்ள நோட்டு என தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments