
காரைக்குடி: கார் பரிசு விழுந்ததாகக் கூறி காரைக்குடி பெண்ணிடம் ஆன்லைன் மூலம் ரூ.12 லட்சம் மோசடி செய்தது குறித்து சிவகங்கை மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
காரைக்குடி முத்துப் பட்டினத்தைச் சேர்ந்த காளிதாஸ் மனைவி ராஜாத்தி (42). இவரை கடந்த மாதம் வாட்ஸ் - அப் மூலம் தொடர்பு கொண்ட ஒருவர், ரூ.12 லட்சம் மதிப்புள்ள கார் பரிசு விழுந்துள்ளதாகக் கூறினார். மேலும் காரின் புகைப் படத்தையும் அனுப்பி வைத்தார். சில நாட்களுக்கு பின்னர், காரை அனுப்பி வைக்கவா அல்லது அதற்குரிய பணம் அனுப்பி வைக்கவா என்று கேட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments