
தருமபுரி: தருமபுரியில் ரூ.600 லஞ்சத்துக்கு ஆசைப்பட்டு கைதான நகராட்சி சர்வேயருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் வெள்ளிச்சந்தை கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் பூபாலன். தருமபுரி அடுத்த அன்னசாகரம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட பூபாலன், வெள்ளிச்சந்தை பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கும், இவரது உறவினர்களுக்கும் சொந்தமான நிலம் அன்னசாகரம் பகுதியில் அருகருகே உள்ளது. வங்கிக் கடன் பெற்று அந்த நிலத்தில் வீடு கட்ட திட்டமிட்ட பூபாலன், வங்கித் தேவைக்காக தன் நிலத்தின் புலப்பட நகல் மற்றும் சித்தப்பா முருகேசன் என்பவரின் பெயரில் உள்ள நிலத்தின் புலப்பட நகல் ஆகியவற்றை வழங்கக் கோரி கடந்த 2010-ம் ஆண்டில் தருமபுரி நகராட்சி சர்வேயர் சுப்பிரமணியம் என்பவரை அணுகியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments