Advertisement

மதுரை அருகே கார் அதிவேகமாக கன்டெய்னர் லாரியில் மோதி பயங்கர விபத்து: 4 பேர் உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அதிவேகமாகச் சென்று கன்டெய்னர் லாரியில் மோதிய விபத்தில் கன்னியாகுமரியைச் சேர்ந்த சகோதரர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், குமரன்குடி அருகிலுள்ள செங்கன்குழிவில்லையைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் ஜேம்ஸ் மார்டின் (34). இவர் வெளிநாட்டிலுள்ள துறைமுகத்தில் பணிபுரிந்தார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்துள்ளார். இவரது தம்பி ஜாம்டேவிட்சன் (30). இவர்களின் உறவினர் கமலேஷ் (54). வேலைக்கென சென்னையில் கூடுதல் படிப்பு ஒன்றில் தம்பி ஜாம்டேவிட்சனை சேர்க்க, மார்ட்டின் திட்டமிட்டார். இதற்காக நேற்று மூவரும் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments