
விழுப்புரம்/ஒட்டன்சத்திரம்: புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தை அடுத்த புதுக்குப்பம் கிராம பெண்கள் புதுச்சேரியில் மீன்களை மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்வது வழக்கம்.
அதன்படி நேற்று அதிகாலையில் புதுச்சேரி செல்வதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் ஷேர் ஆட்டோவுக்காக அவர்கள் காத்திருந்தபோது சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியது. இதில் லட்சுமி (45), கோவிந்தம்மாள் (50) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments