
சென்னை: ஆன்லைனில் வர்த்தகம் செய்யும் ஆர்வத்தில் இணைய லிங்க் மூலம் ரூ.30 ஆயிரம் பணத்தை பறிகொடுத்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதில் தலைமறைவாக இருந்த கொல்கத்தாவை சேர்ந்த 3 பேரை சென்னை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை ஏழுகிணறு போர்ச்சுகீஸ் தெருவை சேர்ந்தவர் சாந்தி. இவர் பொருட்களை வாங்கி விற்கும் தொழில் செய்கிறார். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வசிக்கிறார். இவரது மூத்த மகள் மகாலட்சுமி (19), அண்ணா நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார். இளைய மகள் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments