
சென்னை: ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் 3 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 27 பவுன் நகைகள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை கொளத்தூர் டீச்சர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (70). ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவர் கடந்த பிப்ரவரி மாதம் வீட்டைப் பூட்டிவிட்டு, குடும்பத்தினருடன் உறவினர் வீட்டுக்குச் சென்றார். பின்னர் 4 நாட்கள் கழித்து வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 18 பவுன் நகைகள், வெள்ளி பூஜைப் பொருட்கள், ரூ.1 லட்சம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments