
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் காமநாயக்கன்பட்டி பிரதான சாலை பகுதியைச் சேர்ந்த லூர்துராஜ் மனைவி ஜான்சி(52). இவரது மகளின் செல்போன் எண்ணுக்கு லாட்டரியில் ரூ.25 லட்சம் பரிசு கிடைத்துள்ளதாக கடந்த 13.01.2022 அன்று வாட்ஸ் அப்பில் குறுந்தகவல் வந்துள்ளது. அதனை நம்பி ஜான்சி அதில் உள்ள எண்ணை தொடர்பு கொண்டு ஆதார் கார்டு மற்றும் இதர விவரங்களைத் தெரிவித்துள்ளார்.
பரிசு பணத்தை பெறுவதற்காக பதிவு கட்டணம், ஜிஎஸ்டி, வருமானவரி என பல காரணங்களுக்காக மர்ம நபர் கூறியதை நம்பி பணத்தை அவரது வங்கி கணக்குக்கு ஜான்சி அனுப்பியுள்ளார். அதன்பிறகும் அந்த நபர் ஜான்சியிடம் ரூ.1.5 கோடி மதிப்புள்ள கார் பரிசாக விழுந்துள்ளதாக கூறி ரூ.50 லட்சம் பெற்றுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments