Advertisement

பாடகரும் நடிகருமான விஜய் யேசுதாஸ் வீட்டில் ரூ.60 லட்சம் நகைகள் திருட்டு: அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார்

சென்னை: திரைப்படப் பின்னணிப் பாடகர்விஜய் யேசுதாஸ் வீட்டில் சுமார் ரூ.60லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடுபோனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அபிராமபுரம் போலீஸார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.

புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் கே.ஜே.யேசுதாஸ் மகன் விஜய் யேசுதாஸ். இவரும் சிறந்த பின்னணிப் பாடகராகத் திகழ்கிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார். இவர் பாடிய,‘தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்..’ என்ற பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும்,தனுஷ் கதாநாயகனாக நடித்த`மாரி' திரைப்படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments