
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் சுமார் ரூ.3 கோடி மோசடி நடந்துள்ளதாக கூறப்படும் புகாரின்பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் அடுத்த சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பொன்னேரிக்கரை பகுதியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் உறுப்பு கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபுஎன்பவர் உதவியாளராக பணி செய்து வருகிறார். இவர் கல்லூரியின் வரவு செலவு கணக்கு வழக்குகளை நிர்வகித்து வருவதாக தெரிகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments