
கோவை: கோவையில் ரியல் எஸ்டேட் நிறுவன ஊழியர், துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மதுரை ஆரப்பாளையம் பாக்கியநாதபுரத்தைச் சேர்ந்தவர் சத்தியபாண்டி(31). இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டு கோவை காந்திபுரத்தில் இந்து முன்னணி பிரமுகர் பிஜூ கொலை செய்யப்பட்ட வழக்கில் சத்தியபாண்டி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments