Advertisement

அதே டிசம்பர்...சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. அடுத்த அலை ஆரம்பமா?

சீனாவின் மிகப்பெரிய நகரான ஷாங்காயில், கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் குறைந்திருந்திருந்த கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வருவதாகவும், மருத்துவமனைகளை நோக்கி மக்கள் அதிக அளவில் வரத் தொடங்கியிருப்பதாகவும் சீன மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஷாங்காயில் பல பள்ளிகளில் ஆசிரியர்களும், ஊழியர்களும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, திங்கள்கிழமை முதல் அடுத்த மாதம் கல்வி ஆண்டு முடியும் வரை, பள்ளிகளுக்கு மாணவர்களை வரவழைக்காமல், ஆன்லைன் மூலம் பாடங்களை எடுக்கும்படி ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ஷாங்காய் கல்வித் துறைஉத்தரவிட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments