Advertisement

புதுச்சேரி | சிறுமிகளை கொத்தடிமைகளாக அடைத்து வன்கொடுமை செய்த 8 பேருக்கு வாழ்நாள் சிறை

புதுச்சேரி: புதுச்சேரியில் 5 சிறுமிகளை கொத்தடிமைகளாக அடைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 6 பேருக்கு வாழ்நாள் வரை ஆயுள்தண்டனை விதித்து புதுச்சேரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவ்வழக்கில் மேலும் இருவருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. மொத்தம் 9 பேர் தண்டனை பெற்றுள்ளனர்.

புதுச்சேரியை அடுத்த வில்லியனூர் கீழ்சாத்தமங்கலத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 53). இவர் கோர்க்காடு ஏரிக்கரையில் வாத்துப் பண்ணை நடத்தி வந்தார். இந்த பண்ணையை கவனித்துக் கொள்ளவும், சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தோட்ட வேலைகளுக்கு அனுப்பவும் ஆட்களை வைத்து இருந்தார். தமிழகப் பகுதிகளில் இருந்து சிறுமிகளை அழைத்து வந்து கொத்தடிமையாக கன்னியப்பன் ஈடுபடுத்தியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments