
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 12-ம் வகுப்பு மாணவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களக்காட்டிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் களக்காடு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். இங்கு தலைமையாசிரியர் உட்பட 48 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். இப்பள்ளியில் சமீபகாலமாக மாணவர்களுக்குள் அடிக்கடி மோதல் சம்பவங்கள் நிகழ்ந்து வந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments