
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் உள்ள ஸ்ரீ விவேகானந்த சேவாலய ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் உணவு சாப்பிட்ட பின்னர் ஏற்பட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 குழந்தைகள் கடந்த அக்டோபர் மாதம் 5-ம் தேதி உயிரிழந்தனர்.
இதையடுத்து காப்பகத்தின் உரிமத்தை ரத்து செய்ய சமூக பாதுகாப்புத் துறை இயக்குநர் வளர்மதிக்கு, மாவட்ட ஆட்சியர் சு.வினீத் பரிந்துரை செய்தார். இதையடுத்து, காப்பக உரிமம் ரத்து செய்யப்பட்டு, காப்பகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் உணவு மாதிரிகள், பிரேத பரிசோதனை அறிக்கைகள் முடிவுகளை தொடர்ந்து, அஜாக்கிரதையாக இருந்த காரணத்தால் சிறுவர்கள் உயிரிழப்பு ஏற்பட்டது தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments