
நாமக்கல்: பள்ளிபாளையம் அருகே தம்பதியை கட்டிப்போட்டு ரூ.27.50 லட்சம் மற்றும் 18 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற 10 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.
பள்ளிபாளையம் அருகே வெடியரசம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜவுளி நிறுவன உரிமையாளர் ஜெயப்பிரகாஷ். இவரது வீட்டில் நேற்று முன்தினம் மதியம் ஜெயப்பிரகாஷின் தந்தை மணி (70), இவரது மனைவி பழனியம்மாள் ஆகியோர் மட்டும் இருந்தார். அப்போது, வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத 10 பேர் கொண்ட கும்பல் மணி மற்றும் பழனியம்மாளை தாக்கி, அவர்களின் கை, கால்களை கயிற்றால் கட்டிப் போட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments