
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் (50). இவர் கடந்த 28-ம் தேதி அவரது விவசாய தோட்டத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தின் அருகே மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
தகவல் அறிந்து அங்கு சென்ற கெலமங்கலம் போலீஸார், லட்சுமணனின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments