Advertisement

கரூர் | குடிபோதையில் லாரியை ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஓட்டுநருக்கு 3 ஆண்டுகள் சிறை, ரூ.31,500 அபராதம்

கரூர்: கரூரில் குடிபோதையில் லாரியை ஓட்டி விபத்து ஏற்படுத்தி 2 பேர் உயிரிழந்து, 8 பேர் காயமடைய ஓட்டுநருக்கு கரூர் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.31,500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

கரூர் மாரியம்மன் கோயில் கம்பம் ஆற்றில் விடும்விழா கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் ஜவஹர் பஜார் வழியாக நடந்து சென்றுக்கொண்டிருந்தப் போது அவ்வழியே குடிபோதையில் லாரியை ஓட்டி வந்த கரூர் திருகாம்புலியூரை சேர்ந்த செல்வக்கனி (42) கூட்டத்தில் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். 5 பேர் லேசான காயமடைந்தனர். இதுதொடர்பாக கரூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து செல்வகனியை கைது செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments