Advertisement

கேரள தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியால் தலைமறைவான குற்றவாளி கண்டுபிடிப்பு - 2 ஆண்டுகளுக்குப் பிறகு கர்நாடகாவில் கைது

திருவனந்தபுரம்: கேரளாவில் செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்பிய நிகழ்ச்சியால், தலைமறைவாக இருந்த குற்றவாளியை 2 ஆண்டுகளுக்குப் பிறகு போலீஸார் கைது செய்தனர்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் கே.ராஜேஷ். இவர் 15 வயது சிறுமியை கொலை செய்து, அவள் அணிந்திருந்த நகைகளை திருடிச் சென்றார். மேலும், சிறுமியின் உடலை புதைத்து விட்டார். இந்த வழக்கில் கீழ் நீதிமன்றம் ராஜேஷுக்கு மரண தண்டனை விதித்தது. அதன்பின், அவரது தண்டனையை உயர் நீதிமன்றம் குறைத்து ஆயுள் தண்டனையாக தீர்ப்பளித்தது. இதையடுத்து திருவனந்தபுரம் சிறையில் ராஜேஷ் அடைக்கப்பட்டார். கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கரோனா பரவல் அதிகரித்த போது, அவரது நன்னடத்தையை வைத்து திருவனந்தபுரம் மாவட்டம் நெட்டுகல்தேரியில் உள்ள திறந்தவெளி சிறைக்கு மாற்றப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments