Advertisement

திருப்பூரில் தம்பதியை கட்டிப்போட்டு ரூ.50 லட்சம், 40 பவுன் நகை கொள்ளை

திருப்பூர்: திருப்பூரில் புஷ்பா திரையரங்க ரவுண்டானா ராயபண்டார வீதியைச் சேர்ந்தவர் சங்கமேஸ்வரன் (60). வட்டித் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (57). இவர்களுக்கு 2 மகள்கள். மூத்த மகள், கணவருடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இளையமகள் ஷிவானி (27), சென்னையில் ஐடி நிறுவன ஊழியராக பணியாற்றி வருகிறார்.

கடந்த சில நாட்களாக பெற்றோருடன் ஷிவானி தங்கியுள்ளார். நேற்று முன்தினம் மாலை, முகக்கவசம் அணிந்தபடி வீட்டுக்குள் திடீரென புகுந்த 4 இளைஞர்கள், தம்பதியை தாக்கி கட்டிப் போட்டனர். ஷிவானியை மற்றோர் அறைக்குள் தள்ளி தாழிட்டனர். ராஜேஸ்வரியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை அக்கும்பல் கொள்ளையடித்துச் சென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments