Advertisement

தற்கொலை செய்து கொண்ட சட்டக் கல்லூரி மாணவி உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு: இன்று விசாரணை தொடக்கம்

செங்கல்பட்டு: திருவாரூர் மாவட்டம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த சிவப்பிரகாசம் மகள் கவிப்பிரியா செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரி விடுதியில் தங்கி 2-ம்ஆண்டு சட்டம் படித்து வந்தார்.

கடந்த 28-ம் தேதி கவிப்பிரியாவை சக மாணவிகள் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. பின்னர், அவரது தந்தையிடம் செல்போன் மூலம் கவிப்பிரியா பேசிவிட்டு அறையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். சக மாணவிகள் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் 29-ம் தேதி மாலை கவிப்பிரியா உயிரிழந்தார். மாணவியின் தந்தைசிவப்பிரகாசம் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த செங்கல்பட்டு தாலுகா போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கவிப்பிரியாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டும் உடலை வாங்க மறுத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments