Advertisement

குடிசைமாற்று வாரியத்தில் வீடு பெற்றுத் தருவதாகக் கூறி 75 பேரிடம் ரூ.9.61 கோடி மோசடி செய்தவர் கைது

சென்னை: சென்னை மண்ணடியைச் சேர்ந்த முனியசாமியிடம் (44). ராயபுரம் சரோஜா(40), புது வண்ணாரப்பேட்டை ஆறுமுகம் (45), ஈக்காட்டுத் தாங்கல் வெங்கடேசன் (41), திருவாரூர் மாவட்டம், காப்பனமங்கலத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் (35) ஆகியோர் 2017-ல் அயப்பாக்கம் குடிசைமாற்று வாரியக் குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாக கூறியுள்ளனர்.

இதை நம்பிய முனியசாமி, 3 குடியிருப்புகளுக்காக மொத்தம் ரூ.12 லட்சம் கொடுத்துள்ளார். பின்னர், முனியசாமிக்கு 3 குடியிருப்புகளுக்கான அரசு ஆணைகளை சரோஜா வழங்கியுள்ளார். ஆனால் அவை போலி ஒதுக்கீடூ ஆணைகள் என்பது தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments