Advertisement

ராமநாதபுரம்: அரசுப் பள்ளி ஆசிரியர் போக்ஸோ சட்டத்தில் கைது

கமுதி அருகே அரசு தொடக்கப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரை போலீஸார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர்ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலக்கொட்டகுடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அபிராமம் அருகே பள்ளபச்சேரியை சேர்ந்த ஆதி முத்தமிழ்ச்செல்வன் (43) இரண்டாம் நிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும் சிறுமிகள் பலரை தனியாக அழைத்து பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments